ETV Bharat / city

சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Aug 3, 2021, 5:34 PM IST

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு குறித்து சிபிசிஐடி பதிலளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு
சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு

செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்ரீசுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில், அவர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீன் கோரி மனு

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல் துறையினர் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

தனக்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

அவரது மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்‌ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருவதாகவும், ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்குச் சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும், பள்ளிக்கும் எதிராகப் புகார் அளித்த பெண், புகார் அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்தப் பள்ளியில் நாட்டிய நிகழ்வை நடத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இதயம் தொடர்பான பிரச்னைகள் தனக்கு இருப்பதாகவும், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கூட சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாகவும் சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு

தன் மீதான வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதால், தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆன்மிகப் பயணம் செல்வதற்காக டெல்லி சென்ற தன்னை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து ஒவ்வொரு வழக்காகப் பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிவசங்கர் பாபாவின் இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து சிபிசிஐடி அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் ஸ்ரீசுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில், அவர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீன் கோரி மனு

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல் துறையினர் ஜூன் 16ஆம் தேதி டெல்லியில் கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவரது இரண்டு ஜாமீன் மனுக்கள் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து இரு வழக்குகளில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.

தனக்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

அவரது மனுவில், கேளம்பாக்கம் பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்‌ஷனா அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருவதாகவும், ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்குச் சென்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும், பள்ளிக்கும் எதிராகப் புகார் அளித்த பெண், புகார் அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்தப் பள்ளியில் நாட்டிய நிகழ்வை நடத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, இதயம் தொடர்பான பிரச்னைகள் தனக்கு இருப்பதாகவும், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கூட சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாகவும் சிவசங்கர் பாபா குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு ஒத்திவைப்பு

தன் மீதான வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதால், தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஆன்மிகப் பயணம் செல்வதற்காக டெல்லி சென்ற தன்னை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து ஒவ்வொரு வழக்காகப் பதிவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிவசங்கர் பாபாவின் இந்த ஜாமீன் மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து சிபிசிஐடி அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 3ஆவது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.